நண்பர்களே வாருங்கள்


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் மனிதத்திற்கான உதவி. நான் மற்றும் சில நண்பர்கள் போபாலில் நடந்த அநீதி குறித்து எழுதிக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் பதிவேற்றுவதின் நோக்கம் விளம்பரமோ அல்லது பிரபலமடையவோ அல்ல. அங்கு நடந்த அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்தி சமீபத்தில் சில பதிவுலக நண்பர்களை போபால் குறித்து தொடர்பதிவு எழுதுமாறு கேட்டிருந்தார். ஆனால் அவர்களில் வால்பையனைத் தவிற வேறு யாரும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்த போபால் விட(ய)ம் முடிந்து போன ஒன்றல்ல. வெறும் ஆரம்பம் அவ்வளவுதான். இது நம் மக்களை அழிக்க உருவெடுத்திருக்கும் முதலாளித்துவத்தின் முதல்படி.

இதற்கே 23000 பேர் பலி என்றால் யோசித்துப் பாருங்கள். பின் வரும் காலங்களில் நாமோ அல்லது நம் உறவினர்களோ இது போன்ற பட்டியல்களில் இடம் பெறப் போவதாக ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது இந்த போபால் பிரச்சினை. இப்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.

அதற்கான முயற்சியாய் இந்த போபால் பிரச்சினைக்காக ஒரு புதிய வலைப்பூவை பதிவுலகின் குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் பதிவர்கள் இந்த போபால் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.

இந்த வலைப்பூவின் நோக்கம் இந்த போபால் போன்ற பிரச்சினைகள் குறித்து பதிவர்கள் மற்றும் வசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே. இங்கு இந்த போபால் பிரச்சினைக் குறித்து பதிவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்

பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப் படா)

* நான் மற்றும் என் நண்பர்கள் இந்த விடயம் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறி தெளிவு ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.

* உங்களுக்கு ஒரு புரிதல் வந்ததும் அதைப் பற்றி எழுதுங்கள். அதை bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே இந்த விடயம் குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு விவாதம் செய்வோம்.

* பதிவை எழுதியவர் மட்டும்தான் விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என எண்ணாமல் நண்பர்கள் அனைவரும் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.

2 comments:

புலவன் புலிகேசி said...

இந்தத் தளத்தில் பதிவர்கள் அல்லாத வாசகர்களும் தங்களை இணைத்துக் கொண்டு எழுதுமாறு கோருகிறே

இளமுருகன் said...

மிக நல்ல பணி.வாழ்த்துகள்...அனைவரும் முடிந்ததை செய்யவேண்டும்.

நன்றி.

அன்புடன்
இளமுருகன்

Post a Comment

Copyright © போபால்